Sunday 5th of May 2024 04:50:00 AM GMT

LANGUAGE - TAMIL
பொலிஸ் தலைமையகம்
ஊரடங்கு மீறல்: 7,619 பேர் கைது!

ஊரடங்கு மீறல்: 7,619 பேர் கைது!


இன்று (31) காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான 6 மணித்தியால காலப்பகுதியினுள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 261 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும், 96 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கடந்த 20ஆம் திகதி முதல் நாட்டில் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டு வரும் நிலையிலேயே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன. அதற்கமைய கடந்த 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (31) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 7 ஆயிரத்து 619 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், ஆயிரத்து 864 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE